கொழும்பில் 5 மணிநேர நீர்வெட்டு!
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணித்தியாலங்கள்) இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் (களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மொரட்டுவ – ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





