ஈரான் அணிக்கு அமெரிக்கா அழைப்பு!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் வீரர்கள் அமெரிக்கா வருவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களை அமெரிக்கா வரவேற்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஆண்ட்ரூ கியூலியானி தெரிவித்துள்ளார்.
போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் விடுத்த கோரிக்கையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நிராகரித்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமெரிக்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.





