ஈரானின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி!
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி Ali Mohammad Naini , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் அரச ஊடகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவராவார்.
ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி எத்தகைய போர்ச் சூழலிலும் தடையின்றித் தொடரும் என அவர் சூளுரைத்திருந்தார்.
குறிப்பாக வளைகுடாப் பகுதிக்குள் அமெரிக்கக் கப்பல்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.





