“முக்கிய நோக்கங்கள் நிறைவு: விரைவில் முடிவுக்கு வரும் போர்”
ஈரானுக்கு எதிரான போரின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டன என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.
எனவே, போர் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது மாநில பகுதிகளுக்காக பெரிய அளவிலான எரிபொருளை விடுவிக்க உள்ளது.
கத்தார் மற்றும் சவுதி அரேபியா மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் தற்போத பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னதாக ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே போர் விரைவில் முடிவுக்கு வரும் என ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





