ஈரானுடனான போரால் அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் உச்சம்!
ஈரானுடனான போருக்கு மத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை சுமார் 1.5 டிரில்லியன் (£151bn) டாலராக உயர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
ஒரு வலிமையான ராணுவத்தை உருவாக்கி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே அவர் இந்த ஒதுக்கீட்டை கோரவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஈரான்மீதான போர் ஆரம்பமான முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்கா போருக்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளது. எனினும், இது தொடர்பான துல்லியமான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ட்ரம்பின் மேற்படி கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். எனினும், மத்திய கிழக்கு போருக்கு அமெரிக்காவுக்குள் எதிர்ப்பு இருப்பதால் சில தடைகளை அவர் இது விடயத்தில் எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகின்றது.





