உலகம் செய்தி

ஈரானில் இடைக்கால அரசை வழிநடத்த களமிறங்கும் முக்கிய புள்ளி?

இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி Reza Pahlavi , பாரிஸில் Paris உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை Volodymyr Zelensky சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தான் தகுதியானவர் என்று பஹ்லவி , உக்ரைன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என தெரியவருகின்றது.

அத்துடன், ரஷ்யாவுடன் ஈரான் கொண்டுள்ள இராணுவக் கூட்டணி மற்றும் உக்ரைன் போரில் ஈரானிய ட்ரோன்களின் பயன்பாடு ஆகியவை தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் தற்போதைய போக்கைக் கண்டித்த ஜெலென்ஸ்கி, ஒரு சுதந்திரமான ஈரானை உக்ரைன் விரும்புவதாகத் தெரிவித்தார்.

தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கப் போராடும் உக்ரைன் மக்களின் வலியை மற்ற நாடுகளை விடவும் ஈரான் நன்கு உணரும் என்று பஹ்லவி இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!