இலங்கை செய்தி

திருமலையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது!

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் விசாரணை அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டார்.

திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் குறித்து ஆணை குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக இரண்டு சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல்கள் விசாரணை அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 20 ஆயிரம் ரூபாவே லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!