லெபானின் தலைநகரில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை
லெபானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற குழுவான ஹெஸ்பொல்லாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மத்திய பெய்ரூட்டில் உள்ள ஹோட்டலொன்றில் இஸ்ரேலிய தாக்குதலில் நால்வர் கொலை செய்யப்பட்டதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவின் முக்கிய தளபதிகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.





