எப்ஸ்டீன் விவகாரத்தை திசைத் திருப்பவே இந்த போர் நாடகம் : உலக தலைவர்கள் குற்றச்சாட்டு!
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கிய ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புக்களை மறைப்பதற்காக அல்லது திசைத்திருப்புவதற்காக நிகழ்த்தப்படும் ஒரு நாடகமே ஈரான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நியூயார்க் ஜனநாயகக் கட்சி பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) கோப்புகள் தொடர்பான விசாரணைகளை மழுங்கடிக்கும் ஒரு செயற்பாடே ஈரான் மீதான இந்த தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் நேரம் எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான முன்னேற்றங்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் தொடர்ந்து ஒத்துப்போகிறது என்று அவர் பரிந்துரைத்தார்.
அதேநேரம் குடியரசுக் கட்சி பிரதிநிதி தாமஸ் மாஸி மற்றும் மார்ஜோரி டெய்லர் கிரீன் உள்ளிட்ட பிற சட்டமியற்றுபவர்களும் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.





