மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் : எண்ணெய் விலை 100 டொலராக உயர வாய்ப்பு!
ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மற்றும் தெஹ்ரானின் பழிவாங்கல் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் ஏற்றுமதி இடையூறுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக OPEC+ கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள இரு நாடுகள் தெரிவித்துள்ளன.
OPEC+ எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இடையூறுகளைத் தணிக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடி உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையே இன்றைய தினம் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு $73 ஆக உயர்ந்தது, இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20% க்கும் அதிகமாகும்.
இந்நிலையில் ஈரான் மீதான போர் எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 க்கும் அதிகமாக உயர வழிவகுக்கும் என்று மத்திய கிழக்குத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.





