கண்துடைப்பான ஒப்பந்தம் : காசாவில் நாளாந்தம் உயிரிழக்கும் மக்கள்!
காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த பகுதியில் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருவரை கொலை செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் தலைமையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சமாதான ஒப்பந்தம் வெறும் கண்துடைப்பான ஒரு ஒப்பந்தமாகவே காணப்படுகிறது.
அத்துமீறல், அச்சுறுத்தல் என பல காரணிகளை குறிப்பிட்டு காசா பகுதியில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
மருத்துவ சிகிச்சைக்காக ரஃபாவில் உள்ள நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே சிகிச்சைக்காக வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





