ஜெர்மனியில் வழமைக்கு திரும்புமா விமான சேவைகள்? எதிர்பார்ப்பில் பயணிகள்!!
ஜெர்மனியில் தடைப்பட்டிருந்த விமான சேவைகள் இன்று வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
வெரினிகுங் காக்பிட் (Vereinigung Cockpit) மற்றும் யுஎஃப்ஒ (UFO) தொழிற்சங்கங்கள் தலைமையிலான தொழில்துறை நடவடிக்கை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தியது.
இதன்படி பெரும்பாலான விமானங்கள் பிராங்பேர்ட்டின் (Frankfurt) முக்கிய மையத்தில் தரையிறக்கப்பட்டன. இதனால் சுவிஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த பயணிகள் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
அவர்களுக்காக மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.





