இந்தியா – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி : நிபா வைரஸ் அச்சம் குறித்து அமைச்சர் விளக்கம்!
உலகெங்கிலும் பல நாடுகளுக்கு பரவியுள்ள நிபா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதாரத் துறை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், விமான நிலையப் பகுதியில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
அதன்படி, சுகாதார அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாவில் இந்த வைரஸ் அடையாளம் காணப்பட்டு பல இறப்புகள் பதிவான பிறகு, சுகாதார அமைச்சகம் உடனடியாக அதில் கவனம் செலுத்தியது. இன்றும் கூட, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இது மிகவும் ஆபத்தானது. இது முந்தைய கோவிட் தொற்றுநோய் போன்றது அல்ல, ஆனால் ஒரு வித்தியாசமான சூழ்நிலை உள்ளது. சுகாதாரத் துறையின் புரிதலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் இதில் பணியாற்றி வருகின்றன. . நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறோம்” என்றார்.





