இலங்கை செய்தி

இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இன்று (05) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.

வெலிகம அக்குரஸ்ஸ பிரதான வீதியில் உடுகாவ நான்கு போஸ்ட் பகுதியில் இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச பேருந்து கொழும்பில் இருந்து அக்குரஸ்ஸ நோக்கியும், தனியார் பேருந்து மாத்தறையிலிருந்து வெலிப்பிட்டிய நோக்கியும் சென்று கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அதீத வேகமே விபத்துக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
See also  காவல்துறையின் அடக்குமுறையை மீறி பாகிஸ்தானில் பேரணி நடத்திய இம்ரான் கான் ஆதரவாளர்கள்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content