இலங்கை

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் உயரும் அபாயம்

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் இந்த உயர்வு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு மூன்றாவது கட்டண திருத்தத்தைக் கோரிக்கையாக விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்த காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் நிதிச்செலவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது மின்சார சபைக்கான நிதிச்செலவுகள் 2.48 பில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்கள் கருத்துக்களைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்