இலங்கையில் இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!
இலங்கையில் 10 ஆயிரத்து 146 அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதன் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாடசாலையின் கற்பித்தல் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)





