சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் – ஆச்சரியமளிப்பதாக கூறிய டிரம்ப்

இஸ்ரேல் கடந்த வாரம் சிரியாவில் நடத்திய தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு ஆச்சரியமளித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் டுருஸ் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் சுவெய்டா நகரங்களில் நடைபெற்றது. இவ்வழியாக, சிரியா அரசு ராணுவத்தைக் கைவிட வைப்பதற்காக இஸ்ரேல் அழுத்தம் செலுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், காஸா பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதலும் அதிபர் டிரம்ப்புக்கு அதிர்ச்சி அளித்ததாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, டிரம்ப் உடனே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்கு தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் நீண்டகால நெருக்கமான உறவு இருப்பதால், முக்கிய விவகாரங்களில் நேரடியாக பேசுவது வழக்கமெனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தூதுவாரத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தம் தற்போது இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நடைமுறையில் உள்ளது.
இது தொடர்பாக, கடந்த வெள்ளிக்கிழமை நெட்டன்யாஹு, போப்பை (Pope) நேரில் சந்தித்து, கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் தவறுதலாக நிகழ்ந்ததாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.