ஆசியா

பங்களாதேஷ் விமான விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு!

வங்காளதேச விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது வரை 19 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

F-7 BGI விமானம் உள்ளூர் நேரப்படி மதியம் 1.06 மணிக்கு புறப்பட்டு சுமார் 25 நிமிடங்கள் கழித்து தலைநகரின் வடக்குப் பகுதியில் உள்ள உத்தராவின் டயபாரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மதிய உணவு நேரத்தில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி கேண்டீன் அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக வங்காளதேச நாளிதழ் புரோதோம் அலோ தெரிவித்துள்ளது, அந்த நேரத்தில் ஏராளமான இளம் மாணவர்கள் கல்லூரியில் இருந்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்பு சேவை கட்டுப்பாட்டு அறையின் கடமை அதிகாரி லிமா கான், விபத்தில் குறைந்தது ஒருவர் இறந்ததை உறுதிப்படுத்தினார். காயமடைந்த மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவமனைக்கு (CMH) கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!