அறுவை சிகிச்சைக்கு பின் 26 வயது அமெரிக்க போலீஸ் அதிகாரி மரணம்

பிரேசிலிய பட் லிஃப்ட் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு “அதிக வலி” இருப்பதாக புகார் அளித்த 26 வயது அமெரிக்க காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க காவல் அதிகாரி மற்றும் இராணுவ ரிசர்வ்ஸ்டாகவும் இருந்த வைல்டெலிஸ் ரோசா, தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து, மார்ச் 23 அன்று உயிரிழந்துள்ளார்.
முதலில், மார்ச் 19 அன்று தெற்கு புளோரிடாவில் உள்ள பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி கிளினிக்கில் அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரத்த பரிசோதனை செய்யப்பட்டது, பின்னர் மறுநாள், மருத்துவர்கள் அவரது உடலைச் சுற்றியுள்ள 12 வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொழுப்பை அகற்றி பிட்டத்தில் செலுத்தினர்.
ரோசா இந்த அறுவை சிகிச்சைக்காக $7,495 செலுத்தினார். மேலும் அறுவை சிகிச்சைக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, மார்ச் 22 அன்று தனது குடும்பத்தினரிடம் இந்த செயல்முறை பற்றி கூறினார்.
மறுநாள் காலை, மார்ச் 23 அன்று, ரோசாவுடன் தங்கியிருந்த அவரது தோழிகளில் ஒருவர், குளியலறையில் ரோசா சரிந்து விழுந்து பதிலளிக்காமல் இருப்பதைக் கண்டார். அவர்கள் உடனடியாக அவருக்கு CPR செய்தனர், ஆனால் அவர் இறந்துவிட்டார்.
மியாமி-டேட் மருத்துவ பரிசோதகர், அழகுசாதன அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய இரத்தக் கட்டிகளிலிருந்து நுரையீரல் தக்கையடைப்புதான் அவரது மரணத்திற்குக் காரணம் என்று முடிவு செய்தார்.