உலக சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி

தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 2024 செப்டம்பர் 28-29 அன்று இன்சியோனில் நடந்தது.
2019ல் தனது ராணுவப் பணியின்போது இதற்கான பயிற்சியைத் தொடங்கிய ஓ யோஹான், கடுமையான உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்த இலக்கை அடைந்துள்ளார்.
முன்னதாக 8,707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்திருந்த இவர், ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டதால், மீண்டும் இந்த மாபெரும் 11,707 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
(Visited 2 times, 1 visits today)