ரீல்ஸ் மோகத்தால் 19 வயது இளைஞரை கொலை செய்த சிறுவர்கள்

அதிக லைக்குகளுக்காக “உயர்தர ரீல்களை” உருவாக்க இரண்டு சிறுவர்கள் ஒரு நபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, பின்னர் அவரது தலையை கல்லால் அடித்து, அவரது ஐபோனை திருடியதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
பெங்களூருவில் வசித்து வந்த உயிரிழந்த 19 வயது ஷதாப், தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தர பிரதேசத்தில் பஹ்ரைச்சில் உள்ள தனது மூதாதையர் கிராமமான நாகூர் சென்றிருந்தார்.
“ஷதாப் ஜூன் 21 ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது, அன்றைய தினம் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த குழாய் கிணற்றுக்கு அருகில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஷதாபின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டு, அவரது தலை செங்கலால் தாக்கப்பட்டிருந்தது,” என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
பின்னர் அதிகாரிகளின் விசாரணையின் அடிப்படையில், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
“விசாரணையின் போது, இரண்டு இளைஞர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், ரீல்களை உருவாக்க உயர்தர மொபைல் போன் தேவை, நான்கு நாட்களுக்கு முன்பு கொலையைத் திட்டமிட்டதாக, குறிப்பாக ஷதாப்பின் ஐபோனை குறிவைத்து செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்,” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.