இலங்கை : பூசா சிறைச்சாலையில் கூரையில் ஏறி போராட்டம் நடத்திய கைதிகளால் பரபரப்பு!

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் தீவிர சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு கைதிகள் இன்று (20) சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 18 ஆம் திகதி , ஐந்து கைதிகள் இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டம் நடத்தினர், தற்போது அவர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறைச்சாலையில் இருந்து முன்னதாக பல தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)