இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரம்! தெஹ்ரானிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடையும் நிலையில் ஈரான் தலைநகரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.

மக்கள் தலைநகரை விட்டுச் செல்லவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஈரானின் அணுவாற்றல் தளங்களைத் தாக்க இஸ்ரேலுடன் இணைந்துகொள்வது குறித்து டிரம்ப் பரிசீலிப்பதாகத் தகவல் அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்தது.

தெஹ்ரான் நிபந்தனையின்றிச் சரணடையவேண்டும் என்று திரு டிரம்ப் கூறியதும் இஸ்ரேலும் ஈரானும் ஒன்றன் மீது ஒன்று புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.

தெஹ்ரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஈரானிய ராணுவத் தளங்களைத் தாக்கப்போவதாகக் கூறிய இஸ்ரேல், அங்குள்ள குடியிருப்பாளர்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டது.

ஈரானின் வடக்குப் பகுதியை நோக்கிய போக்குவரத்து அதிகமாக இருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content