இஸ்ரேல் – ஈரானுக்கும் இடையில் அதிகரிக்கும் பதற்றம் – பல நாடு தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் பல நாடுகள் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ள நாடுகளில் அடங்கும்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் நிலையற்ற பாதுகாப்பு நிலைமைக்கு வழிவகுத்துள்ளன.
நடந்து வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை விளைவிப்பதாக இந்த நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளின் அரசாங்கங்கள் பிராந்தியத்தில் உள்ள ஆபத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் தங்கள் பயண ஆலோசனைகளை திருத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, நியமிக்கப்பட்ட பகுதிகளில் தங்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கமும் அறிவுறுத்தியுள்ளது.