தெஹ்ரானை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் : 78 பேர் மாண்டதாக தகவல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களில் மேலும் 326 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ஈரான் அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையை வெளியிடவில்லை.
ஈரான் ஊடகங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)