உலகம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இராணுவத் தளபதி மரணம்

ஈரானின் அணுவாயுதத் தளத்தைத் தாக்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.

ஈரான் சில நாட்களிலேயே 15 அணுக்குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான வளங்களைக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கூறினார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குடியிருப்பு வட்டாரங்கள் உட்படப் பல இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் கூறியது.

தாக்குதல் நடான்ஸ் நகரிலுள்ள அணுவாயுதத் தளத்தில் நடந்தது என்று ஊடகம் கூறியது. தாக்குதலில் ராணுவத் தளபதி ஹுசேன் சலாமியும் அணுச்சக்தி விஞ்ஞானிகள் இருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஈரானிடமிருந்து பதிலடியை எதிர்பார்த்து இஸ்ரேல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த ஆதரவும் கொடுக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ கூறினார்.

ஓமானில் ஈரானும் அமெரிக்காவும் அணுச்சக்தி குறித்து வரும் ஞாயிறன்று ஆறாவது சுற்றுப் பேச்சை நடத்தவிருக்கின்றன.

(Visited 45 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்