பொழுதுபோக்கு

ஒரே வண்ண ஆடை குறித்து ஓபனாக பேசிய கெனிஷா

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உறுதியாக இருக்கும் நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டதால், அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கடுப்பான ஆர்த்தி தன் குழந்தைகள் குறித்தும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பேட்டி ஒன்றில் கெனிஷா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். எனக்கு பல வருடங்களாக ஐசரி கணேஷ் சாரை தெரியும். அதனால் தான் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அப்போது என்னுடன் ரவி மோகனும் வந்திருந்தார். நாங்கள் ஒரே வண்ணம் உடை அணிந்தது தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது.

ஆனால், நண்பர்கள் ஒரே வண்ணம் உடை அணிவது பெரிய விஷயம் இல்லை. அது ஏன் பெரிதாக பேசப்படுகிறது என்று தெரியவில்லை.

இதை ஒரு காரணமாக வைத்து சிலர் ஐசரி கணேஷ் சாரை திட்டி இருந்தனர். இதனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்