துருக்கியில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தை – திருவிழா போன்று கொண்டாடிய மக்கள்

துருக்கியில், லியூகேமியா என்றழைக்கப்படும் ஒருவகை ரத்த புற்றுநோயிலிருந்து மூன்று வயது குழந்தை மீண்டுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கானோர் வானில் பலூன்களை பறக்கவிட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
அலி ஆசப் 8 மாத குழந்தையாக இருந்தபோது லியூகேமியா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகளை 2 ஆண்டுகளாக மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
மகன் முழுமையாக குணமடைந்ததை கொண்டாட வருமாறு தந்தை சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பலூன் விடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(Visited 12 times, 1 visits today)