செய்தி விளையாட்டு

IPL Match 46 – டெல்லியை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 41 ரன்னும், ஸ்டப்ஸ் 34 ரன்னும், அபிஷேக் பொரேல் 28 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 26 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

4வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் குருணால் பாண்ட்யா இணைந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 119 ரன்களை சேர்த்த நிலையில், விராட் கோலி 51 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குருணால் பாண்ட்யா 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content