செய்தி விளையாட்டு

IPL Match 23 – குஜராத் அணிக்கு 218 ஓட்டங்கள் இலக்கு

ஐபில் தொடரின் 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் அணி மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 2 ரன் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அடுத்து சாய் சுதர்சன் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் ஓவருக்கு தலா 10 ரன்கள் என்ற அடிப்படையில் ரன்கள் வந்து கொண்டிருந்தது.

சாய் சுதர்சன் 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11 ஓவரின் 100 ரன்னைத் தொட்டது. பட்லர் ஆட்டமிழந்ததும் ஷாருக்கான் களம் இறங்கினார்.

அதன்பின் ராகுல் டெவாட்டியா உடன் ரஷித் கான் ஜோடி சேர்ந்தார். இவர் 19ஆவது ஓவரின் 3 பந்தில் சிக்சரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்தார். குஜராத் அணி 19 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தது.

கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி