அமரனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்… செம குஷியில் அமரன் டீம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த அமரன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேவாகி உள்ளதால் படக்குழு செம குஷியில் உள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் அமரன். இப்படத்தில் இராணுவ வீரராக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் திரைப்படம் உருவானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.
இப்படம் உலகளவில் ரூ.330 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
அமரன் திரைப்படம் பலரது வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
அதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விருது விழாவில் திரையிட அமரன் படம் தேர்வாகி இருக்கிறது. உலகளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட டாப் 10 சிறந்த படங்கள் தான் இந்த விருது விழாவில் திரையிட தேர்வாகும்.
அந்த பட்டியலில் அமரன் படமும் உள்ளதால், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விழாவில் திரையிடும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.