செய்தி தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்.

காக்கிநாடாவில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய சர்க்கார் எக்ஸ்பிரஸ் அறையிலானது வழக்கம் போல் இன்று அதிகாலை 2.37 AM மணிக்கு புறப்பட்டது. ஆனால் வழக்கம் போல் கும்மிடிப்பூண்டியில் 4.10 AM மணிக்கு வந்து சேர வேண்டிய இந்த விரைவு ரயில் ஆனது 30 நிமிடங்கள் தாமதமாக 4.40 AM மணிக்கு வந்தடைந்தது.

இந்த அறிவுரைகளில் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெதுவாக வந்தடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ற அந்த ரயிலானது முழுவதும் தொழில்நுட்ப கோளாறு அடைந்து மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே அநிறுத்தப்பட்டது இதனால் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் பத்தாமதமாக சென்றது.

இதனால் வழக்கம் போல் வேலைக்கும் பள்ளி கல்லூரிக்கும் செல்லக்கூடியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் மேலும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட நடைமேடையில் நிறுத்தப்பட்ட ரயில்கள் ரயில்வே நிர்வாகத்தால் மாற்றி மாற்றி அறிவித்ததால் பயணிகள் அங்கும் இங்கு மறைந்து பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.

(Visited 2 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி