மத்திய கிழக்கு

வடக்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

வடக்கு காஸா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் குடிமைத் தற்காப்பு மீட்புப் படை தெரிவித்தது.

“ஜபாலியா அல் நஸ்லாவில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் ஏழு பிள்ளைகளும் அடங்குவர். அச்சிறுவர்களில் ஆக மூத்தவருக்கு வயது ஆறு,” எனக் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் மஹ்முட் பசால் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் 15 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

ஹமாசுக்குச் சொந்தமான ராணுவ அமைப்பில் இயங்கிக்கொண்டு இருந்த சில பயங்கரவாதிகளை தான் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அந்தப் பகுதியில் செயல்படும் இஸ்ரேலியத் தற்காப்புப் படைக்கு அவர்கள் அச்சுறுத்தலாக விளங்கியதாக ராணுவம் சொன்னது.

இந்நிலையில், வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இஸ்ரேலியத் தற்காப்புப் படையிடம் உள்ள தகவலுடன் ஒத்திருக்கவில்லை என்று அது கூறியது.

“அனைத்துலகச் சட்டத்துக்கு உட்பட்டு, காஸா பகுதியில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேலியத் தற்காப்புப் படை ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது,” என்று அது மேலும் கூறியது.

அக்டோபர் தொடக்கத்தில் வடக்கு காஸாவில் பேரளவிலான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது

(Visited 37 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!