ஆசியா

செலவு குறைப்பின் ஒரு பகுதியாக சீனாவில் 2,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது நோக்கியா

நோக்கியா நிறுவனம் சீனாவில் ஏறக்குறைய 2,000 ஊழியர்களை அல்லது அங்குள்ள தனது ஊழியர்களில் ஐந்தில் ஒருவரை ஆட்குறைப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன், மேலும் 350 ஊழியர்களை ஐரோப்பாவில் ஆட்குறைப்பு செய்யும் திட்டம் அதனிடம் இருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

அந்த 350 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது தொடர்பான ஆலோசனையை நோக்கியா தொடங்கி இருப்பதை அதன் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.இருப்பினும், சீனாவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு இருப்பது பற்றி அவர் வாய்திறக்கவில்லை.

2023 டிசம்பர் மாத நிலவரப்படி, சீனாவில் 10,400 ஊழிர்களும் ஐரோப்பாவில் 37,400 ஊழியர்களும் நோக்கியா நிறுவனத்தில் வேலை செய்ததாக அதன் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2026ஆம் ஆண்டுக்குள் 14,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து 800 மில்லியன் யூரோ (S$1.14 பில்லியன்) முதல் 1.2 பில்லியன் யூரோ வரை செலவைக் குறைக்க இருப்பதாக கடந்த ஆண்டு நோக்கியா தெரிவித்து இருந்தது.

அதன் ஒரு பகுதியாக தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content