இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அதிகரிப்பு!

இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாகவும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்  சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக  சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குற்றவியல் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை  வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய சிறுவர் அதிகாரசபை என்ற அடிப்படையில் சிறுவர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரசபையின் தலைவர் பாதிக்கப்பட்டவர் பௌத்தமகுருவா அல்லது சாதாரண நபராக என நாங்கள் பார்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!