இலங்கை

இலங்கை: நிரந்தர வீடு இல்லாததால் மரக்கிளையில் வசிக்கும் குடும்பம்

அநுராதபுரம் மாவட்டத்தின் மஹாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தடியில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று நிரந்தர வீடு இல்லாததால் வசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் வாழ்வதற்கு பல்வேறு சிரமங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தனது குடும்பத்திற்கு நிலையான வசிப்பிடமோ அல்லது நிரந்தர வருமானமோ இல்லை எனவும், மரத்தில் குடிசை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் எஸ்.எச்.சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

“காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பிரதேசம் இது. கடைசி முயற்சியாக மரத்தில் இந்தக் குடிசையைக் கட்டினேன். மரத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிய சமையலறை உள்ளது, நாங்கள் எங்கள் உணவைத் தயாரிப்பதற்காக மட்டுமே குடிசையிலிருந்து இறங்குகிறோம். நாங்கள் எங்கள் உணவை சீக்கிரமாகத் தயாரித்து இரவைக் கழிக்க குடிசைக்குள் நுழைகிறோம். எனது மூத்த மகனுக்கு 18 வயது, இளையவருக்கு ஐந்து வயது. என் மகளுக்கு பதினோரு வயது. எனது குடும்பத்தை பராமரிக்க, நான் ஒரு கூலி தொழிலாளியாக அற்ப சம்பளம் பெறுகிறேன், ”என்று அவர் கூறினார்.

See also  மதுபான நிலைய அனுமதிப்பத்திரம் - அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட கூறும் சுமந்திரன்

இவர்கள் முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும், உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தாங்கள் இடம் மாறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் இரண்டு அறைகளையாவது கட்டித் தர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே வேண்டுகோள் என்றும் அவர் கூறினார்.

நன்றி: dailymirror.lk

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content