இலங்கை பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டின் உயர்மட்ட தலைவர்களுடன் தொடர்ச்சியான உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில்,கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் ஹரினி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் SJB தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்தார்.
பிராந்திய பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் சந்தித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)