நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 148 பேர் மரணம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகர் காத்மாண்டுவை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 3,600 பேர் நிவாரண குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தொடரும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 29 times, 1 visits today)