ஐரோப்பா செய்தி

உக்ரைன் இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

உக்ரைன் இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பெரும்பாலான படையினர் போருக்குச் செல்ல மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரேனிய இராணுவத்தின் கட்டளை அதிகாரிகளான 06 பேர் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி, பல உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டதும், எஞ்சியிருந்த பெரும்பாலான வீரர்கள் உக்ரைன் ராணுவத்தை விட்டு வெளியேறியதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

ராணுவ பணியில் சேரும் புதிய உக்ரைன் வீரர்கள், ரஷ்யாவின் ராணுவ பலத்தை கண்டவுடன் மனம் தளர்ந்து பணியில் இருந்து வெளியேற முயல்வதாகவும், உக்ரைன் ராணுவம் கொடுக்கும் உத்தரவுகளை வீரர்கள் மதிக்கவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் உக்ரைன் ராணுவத்தில் இருந்து 19,000 பேர் வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!