பொழுதுபோக்கு

நாகார்ஜுனாவிடம் கண் கலங்கிய சமந்தா… ஓபனாக பேசிய பத்திரிகையாளர்

நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது.

இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார்.

தொடர்ந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்த அவர் குட்டி பிரேக் எடுத்தார்.சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.

சமந்தாவின் கரியர் கிராஃப் உச்சம் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மையோசிடிஸ் என்னும் நோய் வந்தது. அரிய வகை நோயான அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்த சமந்தா ஒருவழியாக அந்த நோயிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை சந்தித்தன. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் சமீபத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஒருபக்கம் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரகள் மறுபக்கமோ சமந்தா விரைவில் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையையும் ரசிகர்கள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சமந்தா குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய அவர்,

“தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சமந்தாவை பேச்சு வருகிறது. தெலுங்கு நடிகர் ஒருவரிடம் சமந்தா 25 கோடி ரூபாய் கடன் கேட்டதாக சொல்வதெல்லாம் பொய். சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்கிவிட்டால் நல்லது என்று நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவருமே நினைத்தார்கள். அதன்படி விவாகரத்தையும் வாங்கிக்கொண்டார்கள். சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் கொடுக்க நாகார்ஜுனா தரப்பு ரெடியாக இருந்தது. ஆனால் சமந்தாவோ நாகார்ஜுனவிடமே நேரடியாக எனக்கு இது வேண்டாம் என்று கண்ணீரோடு சொல்லிவிட்டார்’ என்றார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content