இலங்கை செய்தி

யாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது

வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை கடந்த 14ஆம் திகதி தவறவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் , தனது கைத்தொலைபேசி தவறவிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , தொலைபேசி தவறவிடப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது , வீதியில் காணப்பட்ட கைத்தொலைபேசியை இளைஞன் ஒருவர் எடுத்து செல்வது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் இளைஞனை அடையாளம் கண்டு அவரை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்த வேளை , இளைஞன் , கைத்தொலைபேசியை முழங்காவில் பகுதியை சேர்ந்த இளைஞனுக்கு 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து தொலைபேசியை வாங்கிய இளைஞனை பொலிஸார் கைது செய்து , தொலைபேசியையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content