ஆசியா

நேபாளத்தில் ஓடுபாதையில் இருந்து தவறிய விமானத்தால் நேர்ந்த துயரம்!

நேபாளத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி விழுந்தது.

இந்த விபத்தில் குறைந்தது நான்கு பயணிகள் உயிரிழந்ததாக காத்மாண்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தினேஷ் மைனாலி உறுதிப்படுத்தியுள்ளார். விமானி உயிர் பிழைத்துள்ள நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் உள்நாட்டு சௌர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமானது மற்றும் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு சென்று கொண்டிருந்ததாக நேபாள தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

விமானம் சறுக்கிச் சென்றதற்கான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை, அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்