யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் படுகொலை – கணவர் கைது

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வந்த திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 14 times, 1 visits today)