இலங்கை செய்தி

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை விருப்பப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள சண்முகம் குகதாசன் பெறவுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு  அதிக வாக்குகளை பெற்றவர்களின் பட்டியலில் சம்பந்தனுக்கு அடுத்ததாக குகதாசன் இருக்கின்றார்.

அவர் 16770 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார்.

அவரின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி கிரியைகளுக்காக திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!