இலங்கை செய்தி

தெற்காசியாவிலேயே சிறந்த கல்வி இலங்கையில் உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில்

 

தெற்காசியாவில் எதிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த கல்வி முறையை உருவாக்குவதற்கு தாம் உழைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இக்கட்டான பொருளாதார நிலைமைக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் கல்விக்கான நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹலவத்த, கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் முதற்கட்டமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் கோஷங்களை எழுப்பி காலத்தை கடத்தும் யுகம் அல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!