ஐரோப்பா

அரசியல் கைதிகளின் மரணம் தொடர்பில் பெலாரஷ்ய அதிகாரிகளுக்கு ஐ.நா விடுத்துள்ள உத்தரவு!

அரசியல் கைதிகளின் சித்திரவதை மற்றும் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு பெலாரஷ்ய அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெலாரஸிற்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, பெலாரஸில் காவலில் இறந்த ஐந்து பேர் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டில் தண்டனை பெற்றதாகக் கூறுகிறது.

இறந்தவர்களில் எவரும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், சிறையில் இருந்த கைதிகள் இறந்தது “அரசு அதிகாரிகளால் தன்னிச்சையாக உயிரைப் பறிக்கும் அனுமானத்தை உருவாக்குகிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வழக்கறிஞர்கள், தற்போது சிறையில் உள்ள பல பெலாரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பில் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வியாஸ்னா மனித உரிமைகள் மையத்தின் கூற்றுப்படி, நாட்டில் தற்போது 1,401 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர், அவர்களில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 45 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்