இலங்கை

2040 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

பொருளாதார இலக்குகளை அடையும் அதேவேளையில் 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்ற இலக்கை அடைவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற உலகளாவிய இலக்கை தனது தேசிய கொள்கையில் உள்ளடக்கிய ஆசியாவின் முதல் நாடு இலங்கை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு சலுகைகளைப் பெற உலகின் வளர்ந்த நாடுகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஆண்டு உக்ரைன் போருக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் பயன்படுத்திய பணம் இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானது என்றும் ஜனாதிபதி கூறினார்.

முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைக் கையாள்வதில் இலங்கையின் தற்போதைய வகிபாகத்தை பாரம்பரிய ஏற்பாடுகளுடன் மட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டார்.

இது மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நாட்டின் பொருளாதாரக் கொள்கையிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!