உரிமம் பெறாத வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கினால் அபராதம் : ஸ்பெயினில் வரும் நடைமுறை!

ஸ்பெயினில் விடுமுறைக்கு வருபவர்கள் உரிமம் பெறாத தெரு வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை வாங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஸ்பெயினின் கோஸ்டா பிளாங்காவின் தெருக்களில் இரகசிய போலீசார் ரோந்து செல்வார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபலமான விடுமுறை இடமானது சட்டவிரோத தெரு விற்பனையாளர்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் பேரம் பேசும் விலைகளால் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இந்த மலிவான நினைவுப் பொருட்களை வாங்குபவர்களுக்கு 170 பவுண்ட்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)