ஆசியா செய்தி

வடகொரியாவின் குப்பை பலூன் அச்சத்தில் தென்கொரியா!

வடகொரியாவிலிருந்து இன்று முதல் குப்பைகள் நிறைந்த மேலும் பல பலூன்கள் வந்துசேரும் என்று எதிர்பார்ப்பதாக தென்கொரியா குறிப்பிட்டுள்ளது.

பழுதடைந்த மின்கலன்கள், சிகரெட் துண்டுகள், உரம் முதலியவை அடங்கிய சுமார் 260 பலூன்களை வடகொரியா செவ்வாய், புதன்கிழமைகளில் தென்கொரியாவுக்கு அனுப்பியது.

மனிதநேயமற்ற அந்த நடவடிக்கை, தரந்தாழ்ந்த ஒன்று என்று சோலின் கூட்டுப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களைத் தென்கொரிய ஆர்வலர்கள் அந்நாட்டு எல்லைக்கு அனுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலடியாகவே தற்போது நேர்மையான முறையில் பரிசுகள் தரப்பட்டுள்ளதாக கூட்டுப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!