செய்தி

இலங்கை தமிழ் மக்களிடம் நாமல் விடுத்த கோரிக்கை

இலங்கையில் தமிழர்கள் தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடனான மக்கள் சந்திப்பொன்று மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் சந்திரகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கலந்துகொண்டார்.

இதன்போது, அனைத்து ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, இம்முறை அவ்வாறு நடக்காமல், அறிவுப்பூர்வமான தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்காக பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறாத மஹிந்த ராஜபக்ஸ தான் தமிழர்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content